தொடருவோர்

Thursday, February 23, 2012

ராகிங் என்ற ராஷசன்

  மாணவ சமுதாயத்தின் கலாச்சார சீரழிவுக்கு ராகிங்  ஒரு காரணமாக ,அல்லது மோசமான எடுத்துக்காட்டாக அமைந்து , அனைவரின் அமைதியைக் கெடுக்கும் வண்ணம் புதராய் வளர்ந்து மண்டிக்கிடக்கிறது.இந்த அரக்கனால் வாரிசுகளை இழந்தவர்கள்,நல்ல வாழ்க்கையை இழந்தவர்கள் எத்தனை பேர்?
  இந்த அவல நிலை தொடராமல் வேலி அமைப்பதும் அதை அறவே அப்புறப்படுத்துவதும் யாருடைய கடமை. மாணவர்களா?பெற்றொர்களா ?அல்லது இவர்கள் இருவரும் நம்பி இருக்கும் கல்விக்கூடங்களா?
   கல்லூரி வாழ்க்கையைத் துவங்கும் முன்பே நம் மாணவ சமுதாயம்,எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். பாலர் வகுப்பிலிருந்தே, இதுதான் உன் பாதை ,இப்படித்தான் நீ இருக்க வேண்டும்”, என்ற கட்டளைகள் மூலம்,அவர்களது சுய சிந்தனைக்கு ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டுவிடுகிறது. 
  அடுத்த வீட்டுக் குழந்தைகளோடு ஒப்பிட்டுத், தவறான வழியில் உரம் ஊட்டிய பெற்றொர்களின் இடிக்கிப்பிடி,,
தமது பள்ளியின் 100 விழுக்காடு மாணவர்கள் தேர்வான பெருமைக்கும், வரும் ஆண்டின் வருமானத்துக்கும் பங்கம் வராது பார்த்துக்கொள்ளும் பள்ளி நிர்வாகிகளின், கெடுபிடி,
 இவை இரண்டுக்கும் நடுவே வசமாய் மாட்டிக் கொண்டு தத்தளிக்கும் மாணவ சமுதாயத்தின் நிலைமை மிகவும்  பரிதாபத்துக்கு உரியதுதான்.
 தான் கல்வி கற்பது பெற்றோரின் ஆசைக்காகவா?,பள்ளியின் பெருமைக்காகவா? ஆசிரியர்களின் அடிக்குத் தப்பிக்கவா ,என்பதை உணர்ந்து, தெளிவு படுத்தும் முன்பே ,அவர்களது பள்ளிப் பருவத்தில் பாதி பலனின்றி கடந்து போகிறது.
அடுத்த பாதியில் கற்பது தனக்காக இல்லை என்பது அவர்கள் மனதில் திணிக்கப்பட்டு யந்திரத்தனமாகப் படித்து கல்லூரி வாசலில் கால் பதிக்கின்றனர்.
  பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரிப் பருவத்துக்கு மாறும் பொழுது,ஒரு மாணவி அல்லது மாணவர்களிடையே , உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாற்றங்களும் தனித் தன்மையும் சுயசிந்தனையும் வெளிப்பட்த் தொடங்குகின்றன..
 இயற்கை வழங்கிய அந்த வளர்ச்சியைப் பெற்றோர்கள் ,நியாயமான தேவையான சுதந்திரத்துடன் ஆரோகியமான திசையில் திருப்பிவிட்டு,வழி நட்த்தியிருந்தால்,,மாணவர்களுக்கு, எல்லோருக்கும் நன்மை பயக்கும் வகையில் நல்ல சூழ்நிலை அமைய வாய்ப்பு இருந்திருக்கும்
  மாறாக அவர்களது சுயசிந்தனையும்,சுதந்திரமும் ,மன ரீதியான மாற்றங்களும் மதிக்கப்படாமல் முடக்கப் பட்டால்,பாதிக்கப்படுவது மாணவர்கள் மட்டும் அல்ல,பெற்றோரும் பள்ளியும்தான்.
 முடிவில் மாணவ மணிகளை நம்பி இருக்கும் எதிர்கால இந்தியாவும் ஏமாற்றத்துக்கு உள்ளாகும் நிலை உருவாகும் என்பதைக் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை
  குழந்தைகளின் நன்மைக்குத்தான் என்று எண்ணி ,பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களை தத்தம் ,தனிப்பெருமைக்காக வழிநடத்துதலால்,மாணவப் பருவவாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய  இனிமையான ஆரோக்கியமான பல நல்ல விஷயங்களைப் புறக்கணிக்க வைத்துத்  தன் படிப்பு ,அதன் பின் வேலை ,குடும்பம் என்றும், நான் ,எனது என்ற ,சுயநலமும் கலந்த எந்திரங்களை ,உருவாக்கிவிடுகின்றனர்.
  சீரான பாதையில் திசை திருப்பிவிடப்படாத மாணவன்,தன்னைப் பொறுத்தவரை தோல்வியில் விழுந்து தனக்கு மட்டும் பாதகமான சூழ்நிலையில் உழல்வதே வேதனையான விஷயம்தான் ,ஆனால் தான் அழிவுப்பாதையில் செல்வதோடு நில்லாமல்,தன் பெற்றோருக்கும் ,பள்ளிநிர்வாகத்துக்கும் மனவருத்தமும் அவதூறும்  ஏற்படுமாறு நடக்க முற்படுவான் என்றால்,அது நம் சமுதாயத்துக்கு எத்தனை பெரிய சீர்கேட்டை உண்டுபண்ணும் என்பதை நினைத்துப் பார்த்தால்,நாம் அனைவரும் அதிர்ந்துதான் போவோம்.
  அப்படி ஒரு சீர்கேட்டின் தொடக்கத்தின் முதல் படிதான் ,கல்லூரியில் நட்த்தப்படும் இந்த ராகிங் என்ற அரக்கத்தனமான அறிமுகப்படலம்.இதை நட்த்துவது யார்?
  வாழ்க்கையில் ,உயரவேண்டும் என்ற எண்ணத்தோடு ,கல்வி கற்கும் மாணவன் இது போன்ற அபாயத்தைச் செய்ய யோசிப்பான்
 . வீட்டில் பெற்றோரின் கவனிப்பின்மை,கண்டிப்பு,எதிர்பார்ப்பு இவைகளில் ஏதோ ஒரு காரணம், ஒரு மாணவனைக், கல்வி கற்பது கஷ்டமான கடமை என்ற திசையில் திருப்பிவிடப்படவே ,கல்வியை ஒதுக்கிவிட்டு இவை போன்ற ஆரோக்கியமற்ற ஆபத்தான கேளிக்கைகளில் ஈடுபட்டு தன் கடமைகளிலிருந்து தப்பிக்க முயற்ச்சிக்கிறான்.
  சிற்பம் ஓவியம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு தமிழ் அறிஞர் இவ்வாறு விளக்கினார்.ஓவியமானது ,நாம் ஒரு திரையில் கோடுகளால் வரைந்து,வர்ணங்களை இட்டு நிரப்புகிறோம்,ஆனால் சிற்பம் ஒரு கல்லில் தேவையற்ற பகுதிகளை நீக்கி சிற்பத்தை வெளிக்கொணர்கிறோம்.தேவையற்றவைகளைக் களையும்  நினைப்போடு நாம் நம் குழந்தைகளைச் செதுக்கியிருக்கிறோமா என்று யோசித்தால் பலருடைய பதில் இல்லை என்றுதான் வரும்.
  நம் எண்ணங்களை அவனுள் திணிக்கிறோம்,நம் ஆசைகளை அவன் மனதில் பதிக்கிறோம்,நம் கனவுகளை அவன் நிறைவேற்ற வேண்டும் என்று  கட்டாயப் படுத்துகிறோம்.நம்மால் முடியாததை மற்றொரு தனிமனிதனிடம் அவன் நம் மகனாக இருந்தாலும் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.
 ரிஷிமூலம் நதிமூலம் அறிய முற்பட்டால் சில கசப்பான உண்மைகள் வெளியாகும் .அந்த வகையில் பார்த்தால் மாணவனின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தோல்விக்கும் பெற்றோரே பொறுப்பு என்ற உண்மை புலப்படும்.
   ராகிங்கில் ஈடுபடும் மாணவனின் மனஓட்ட்த்தை அலசுவோம்.
 கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து,மனப்புழுக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவன்,கல்லூரி வாசல் தொட்டதும் ,உண்டான தனித்துவம், தான் ,என்று உருவாகும் எண்ணம் அவனைக் கொஞ்சம் அலைக்கழிக்க்த் தொடங்கவே,தனக்கு யாருடைய அறிவுரையும் தேவை இல்லை என்ற ம்மதையை, மனதுக்குள் மறைத்து வைத்து,அறிவுரைகளைப் ஏற்பது போல் ஏமாற்றி ,நல் வழிகளைப் புறக்கணிக்க முற்படுகிறான்.
  இவன் இட்ட பாதையில் ,மிக இலகுவாக, சமூதாயத்தைச் சீரழிக்கும் நுண்கிருமிகள் நுழைந்து மாணவனை ஆட்டிப்படைக்கின்றன .விளைவு , அவன்,தன்னுடைய  நலம் நாடும் நல்லவர்களுக்கு வேலி போடுகிறான் ,தோள்கொடுக்கும் நல்ல நண்பர்களுக்குத் தடை விதிக்கிறான் ,நல்ல பாதை காட்டும் அறிவுரைகளுக்குச் செவி அடைக்கிறான் .
 படிப்பவனோடும் நல்லவர்களோடும் ஒப்பிட்டுப் பேசப்பட்டே வளர்ந்த ஒருவனுக்கு ஒரு கட்ட்த்தில் நல்வழி நடக்க முயன்று ஏற்பட்ட தோல்வியில் பாதிக்கப்பட்டு ,நல்லவர்களை வெறுக்கத் தொடங்குகிறான்.அத்தோடு நிற்காமல் படிப்பிலும் குணத்திலும் குறைந்தவர்களைக் கூட்டாளியாக்கிக் கொண்டு அவர்களோடுத் தன்னைப் பிணைத்துக்கொண்டு பாம்புகளுக்கு நடுவே ராஜநாகமாக வலம் வருகிறான்.உடன் இருப்பவரின் உசுப்பல் முகஸ்துதி என்ற நச்சு நீர் ஊற்றி வளர்க்கப் பட்ட விஷவிருட்ச்சமாய் நின்று,  இவனைப் பாராட்ட்தவர்கள் பழிவாங்கப் படுகின்றனர்,ஏறடுத்துப்பார்க்கதவர்கள் ஏளனப்படுத்தப்படுகிறார்கள்.இப்படித்தான் அரங்கேறுகிறது ,ராகிங் என்ற நாடகம். 
  இதற்கு யார் பொறுப்பு?
மனத்தளவில் ஆரோக்கியமற்ற மாணவர்கள் தத்தம் மன உளைச்சலை வெளிப்படுத்த பல வடிகால்களை ஏற்படுத்தி போலியான சந்தோஷத்தில் திளைக்கின்றனர்.தேவையில்லா கெட்ட மற்ற பழக்கங்கள் அவனை மட்டுமே பாதிக்கும் ஆனால் ராகிங் கலாச்சாரத்தால் பல குடும்பங்களின் சந்ததிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.பாதிக்கப்பட்ட பெற்றோரின் இந்த வேதனையை  உணராமல்,தொடர்ந்து பாவங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர் .
 இவர்களை நல்வழிப்படுத்துவதில் முக்கிய பொறுப்பு பெற்றோருக்குத்தான் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  நம் குழந்தைகளின் நலனில் ,சம்பளத்துக்காகப் பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்களுக்கு இருக்குமா ,வருமானமே குறியாக் கல்விக்கூடங்களை நடத்தும் பெரும்பாலான நிர்வாகிகளிடம் இருக்குமா?
  ஒரு மாணவன் பதக்கமும் பரிசும் வாங்கி குவிக்கும் போது பெற்றோர் அதற்கான காரணம் தாங்கள்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் அதே வேளை ,மாணவனின் தீய நட்த்தைக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகிகளும் உங்கள் பக்கம் விரலை நீட்டி அவர்கள் நழுவி விடுவர்.
 பெற்றோர்கள் த்த்தம் கடமைகளைத் தன்னலம் ஒன்றையே குறிக்கோளாக்க் கொண்டு ஆற்றாமல்,பொதுநல நோக்கோடு ஆற்றினால் வெற்றி நிச்சயம்.
 குழந்தைகள் ராகிங் பிடியில் அகப்படாமல் தப்பி வந்த சந்தோஷத்தை அவர்கள் எப்படிக் கொண்டாட வேண்டும்?அடுத்த ஆண்டு ,தாம் சென்ற ஆண்டில் பரிதவித்த நிலை யாருக்கும் வராதிருக்கத் தன் குழந்தைகளை ராகிங்கில் ஈடுபடாதவண்ணம் அறிவுரை கூறி அனுப்பிவைக்கவேண்டும் ஆனால் பெரும்பாலானோர் இதைச் செய்யத் தவறி விடுகின்றனர்.
தன் குழந்தை ராகிங்கில் மாட்டிவிடக்கூடாது என்று பிரார்த்தனை செய்யும் பெற்றோர்களில் எத்தனை பேர் தன் குழந்தை ராகிங்கில் ஈடுபடக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறார்கள்?
பெற்றோர்களே,குழந்தைகள் நிழல் தரும் நல்ல ஆலமரமாக வளர ,வேருக்கு அன்பு என்னும் நீர் ஊற்றுங்கள்.சுயநலம் கலவாத பாசத்தை காட்டுங்கள்.உங்கள் நோக்கத்தில் சுயநலம் தென்படுமானால் ,வளரும் குழந்தைகளும் அதே பாணியில்தான் கல்வி கற்பதும் பணி புரிவதுமாக வளர்ந்து நிற்பார்கள்..நாட்டு நலம்,சமூக நலம் பேணுதல் போன்ற சேவை மனப்பான்மையுடன் வளர வழி காட்டுங்கள் .தேசம் முன்னேற பிள்ளைகளை வலுவான தூண்களாக நிறுத்துங்கள்.இயலாத பட்சத்தில் சமூக சீர்கேட்டுக்குத் துணைபோகாத சாதாரண நல்ல குடிமகனாகவாவது தேசத்துக்கு அளிப்போம்.

 


Tuesday, February 21, 2012

எனக்கும் விருது கொடுத்துடாங்க






மிடில்க்ளாஸ் மாதவி அளித்த ஹைக்ளாஸ் விருது.
நன்றி மாதவி.
எனக்கு பிடித்த ஏழு விஷயங்கள் எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.
இதோ எனக்கு பிடித்த ஏழு.

வானவில்லின் ஏழு நிறங்கள்
கடை ஏழு வள்ளல்கள்
ஏழு ஸ்வரங்கள்
ஏழு அதிசயங்கள்
ஏழு கடல்
ஏழு அடிகள்
ஏழு ஜென்மங்கள்   

எல்லாமே எனக்கு பிடிக்கும்

நான் இந்த விருதை கீழ்கண்ட ஐந்து பிளாகருக்கு அன்புடன் அளிக்கிறேன்

லஷ்மி

அவரவர்கள் பெயரைச் சொடுக்கினால் அவர்களது வலைப்பூ விரியும்

என் விருதையும் அழைப்பையும்  அன்புடன் ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
உங்களுக்குப் பிடித்த ஏழு விஷ்யங்களை பதிவர்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, January 15, 2012

தினமலரின் பொங்கல் வாழ்த்து

இன்று என்னை தினமலர் வாழ்த்தியது.
என் புத்தகத்தை தமிழ் நாடு முழுக்கத் தெரியப்படுத்தி என்னை பெருமைப்படுத்தியமைக்கு தினமலர் ஆசிரியருக்கு  என் நன்றி

Sunday, December 4, 2011

மங்கையர் மலருக்கு நன்றி

மங்கையர் மலருக்கு நன்றி!
எழுத்தில் கொஞ்சம் சோர்வு வந்த போது என்னை மாத்தி யோசிக்க வைத்த மங்கையர்மலருக்கும், என் கட்டுரையின் பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பி, வள்ளுவத்தில் பதியச் சொல்லி அன்புக்கட்டளையிட்ட ராமலஷ்மிக்கும் நன்றி.


 
***

Thursday, October 20, 2011

எல்லோர்க்கும் பெய்யும் மழை



என்னை சிலிர்க்க வைத்த விஷயம்
-------------------------------
  என் தோழி என்னுடன் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயத்தை அவரது வேண்டுகோளுக்கு இணங்க வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
    என் தோழியின் கணவர்,வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.அவர் பணியில் சேர்ந்த ஆண்டு, ,தன்னுடன் வேலை பார்த்த ஒரு நண்பர் ,ரூ.400/கடனாகக் கேட்க ,இவரும் கடனாக நினைக்காமல் உதவியாக அளித்திருந்தார்.[64ம் ஆண்டில் 400 ரூபாய் என்பது சிறிய தொகை இல்லை.]
     அதன்பிறகுஇருவருமேவேலைநிமித்தம்பலஊர்கள்மாற்றலாகி,ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவோ சந்திக்கவோ வாய்ப்பு கிட்டாமல், வேலை பளுவில் மூழ்கிவிட்டனர்.
    சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வருகிறது.46 ஆண்டுகளுக்குமுன் ,கடன் வாங்கிய நண்பரின் அழைப்பு அது.”பல வருடங்களாக உங்கள் விலாசம் தேடி கண்டுபிடித்து,ஃபோன் பண்ணுகிறேன்.நாளை வீட்டுக்கு வருகிறேன் என்று கூறி வரும் வழியைக் கேட்டுக் கொண்டார்.
     மறுநாள் வீட்டுக்கு வந்த நண்பர்,மலரும் நினைவுகளாக அனைத்தையும் பகிர்ந்து கொண்டு,விடை பெற்றவராய் எழுந்தவர்,நண்பர் கையில் ஒரு கவரைத் தந்தார்.
    கவரைத் திறந்து பார்த்த இவர்,அதில் ரூபாய் 38 ஆயிரத்துக்கும் கூடுதலான, ஒரு காசோலையைக் கண்டு ,
”என்ன இது!?”என்று ஆச்சரியம் கலந்து கேட்டவருக்கு
  அந்த நண்பர் சொன்ன பதில்,”நான் உங்களிடம் வாங்கிய ரூபாய் 400 ஐ,46 ஆண்டுக்கான ,வட்டியும் முதலுமாகத் திருப்பியிருக்கிறேன்...”
    என் தோழியும் அவரது கணவரும் ,”இப்படியும் உண்டா” என்று திகைத்து நிற்க ,இருவரையும்,நன்றியுடன் ஆசுவாசப் படுத்தியபின் விடை பெற்றார் அந்த நண்பர்.
   இந்த சம்பவத்தை என்னோடு பகிர்ந்ததோடு நில்லாமல்,”நீங்கதான் பிளாக் வைத்திருக்கிறீர்களே,அதில் எழுதுங்கள்....இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியட்டும் ...”என்று அன்பு கட்டளை இட்டார்.
   அவர் பகிர்ந்துகொள்ளச் சொல்லாததையும், நான் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.கடனை வட்டியுடன் சேர்த்துத் திருப்பிய நண்பரது நாணயம் போற்றப் படவேண்டியதுதான்,என்றாலும்,என் தோழியின் செய்கை, அதையும் தாண்டி ஒரு படி மேலே நின்றது.
    எதிர்பாராத சமயத்தில் ஒரு பெரும் தொகை தங்களைத் தேடிவந்த சந்தோஷத்தை,அவர்கள் எப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
 ”எங்கள் வீட்டில் வேலை பார்த்துவரும் பெண் வீடு கட்டிக் கொண்டிருக்கிறாள்,
”இந்தப் பணம் எங்களிடம் இருந்தால் அக்கெளண்டில் சேருமே தவிர எங்களுக்கு,அவசரத் தேவை என்ற கட்டாயத்தில் அந்தப் பணம் இல்லை,
    கடந்த 11 வருடங்களாக எங்களிடம் வேலை பார்க்கும் பெண்ணுக்குக் கொடுத்தால் பிரயோசனமாக இருக்கும்,
என்று கருதி அவளுக்கு அப்படியே பரிசாகத் தந்துவிட்டோம்...”என்று சொன்னதைக் கேட்டதும்
இந்த முறை ,இப்படியும் உண்டா?!!!என்று   நான் திகைத்து நிற்கிறேன்

.சமயத்தில் உதவிய நண்பரிடம் பெற்ற கடனை மறக்காமல்,பல ஆண்டுகள் கழித்து ,வட்டியுடன் திருப்பிய ஒருவரது நாணயம் என்னை என்னை வியக்க வைத்தது.என்றால்,எதிர்பாராமல் வந்த பெரும் தொகையை ,தேவையான ஒருவருக்குப் பரிசாகத் தந்த ,என் தோழியின் ஈகை உள்ளம் சிலிர்க்க வைத்தது.
இவர்களைப்போல் ஒரு சிலர் இருப்பதால்தான் வருணபகவான் விளைநிலம் பார்த்து,தன் கருணையைக் காட்டுகிறார் என்பதை உணர வைத்தது.

:நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.:
என்று ஔவையார் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார் பாருங்கள்.

list