மாணவ சமுதாயத்தின்
கலாச்சார சீரழிவுக்கு ராகிங் ஒரு காரணமாக
,அல்லது மோசமான எடுத்துக்காட்டாக அமைந்து , அனைவரின் அமைதியைக் கெடுக்கும் வண்ணம் புதராய்
வளர்ந்து மண்டிக்கிடக்கிறது.இந்த அரக்கனால் வாரிசுகளை இழந்தவர்கள்,நல்ல வாழ்க்கையை
இழந்தவர்கள் எத்தனை பேர்?
இந்த அவல நிலை தொடராமல் வேலி அமைப்பதும் அதை அறவே அப்புறப்படுத்துவதும் யாருடைய கடமை. மாணவர்களா?பெற்றொர்களா ?அல்லது இவர்கள் இருவரும் நம்பி இருக்கும் கல்விக்கூடங்களா?
இந்த அவல நிலை தொடராமல் வேலி அமைப்பதும் அதை அறவே அப்புறப்படுத்துவதும் யாருடைய கடமை. மாணவர்களா?பெற்றொர்களா ?அல்லது இவர்கள் இருவரும் நம்பி இருக்கும் கல்விக்கூடங்களா?
கல்லூரி
வாழ்க்கையைத் துவங்கும் முன்பே நம் மாணவ சமுதாயம்,எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
ஏராளம். பாலர் வகுப்பிலிருந்தே, ”இதுதான் உன் பாதை ,இப்படித்தான்
நீ இருக்க வேண்டும்”, என்ற கட்டளைகள் மூலம்,அவர்களது சுய சிந்தனைக்கு ஒரு
முட்டுக்கட்டை போடப்பட்டுவிடுகிறது.
அடுத்த வீட்டுக்
குழந்தைகளோடு ஒப்பிட்டுத், தவறான வழியில் உரம் ஊட்டிய பெற்றொர்களின்
இடிக்கிப்பிடி,,
தமது பள்ளியின் 100 விழுக்காடு மாணவர்கள் தேர்வான
பெருமைக்கும், வரும் ஆண்டின் வருமானத்துக்கும் பங்கம் வராது பார்த்துக்கொள்ளும் பள்ளி
நிர்வாகிகளின், கெடுபிடி,
இவை இரண்டுக்கும்
நடுவே வசமாய் மாட்டிக் கொண்டு தத்தளிக்கும் மாணவ சமுதாயத்தின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்கு உரியதுதான்.
தான் கல்வி கற்பது
பெற்றோரின் ஆசைக்காகவா?,பள்ளியின் பெருமைக்காகவா? ஆசிரியர்களின் அடிக்குத்
தப்பிக்கவா ,என்பதை உணர்ந்து, தெளிவு படுத்தும் முன்பே ,அவர்களது பள்ளிப் பருவத்தில்
பாதி பலனின்றி கடந்து போகிறது.
அடுத்த பாதியில் கற்பது தனக்காக இல்லை என்பது அவர்கள்
மனதில் திணிக்கப்பட்டு யந்திரத்தனமாகப் படித்து கல்லூரி வாசலில் கால்
பதிக்கின்றனர்.
பள்ளிப்
பருவத்திலிருந்து கல்லூரிப் பருவத்துக்கு மாறும் பொழுது,ஒரு மாணவி அல்லது மாணவர்களிடையே
, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாற்றங்களும் தனித் தன்மையும் சுயசிந்தனையும்
வெளிப்பட்த் தொடங்குகின்றன..
இயற்கை வழங்கிய
அந்த வளர்ச்சியைப் பெற்றோர்கள் ,நியாயமான தேவையான சுதந்திரத்துடன் ஆரோகியமான
திசையில் திருப்பிவிட்டு,வழி நட்த்தியிருந்தால்,,மாணவர்களுக்கு, எல்லோருக்கும்
நன்மை பயக்கும் வகையில் நல்ல சூழ்நிலை அமைய வாய்ப்பு இருந்திருக்கும்
மாறாக அவர்களது
சுயசிந்தனையும்,சுதந்திரமும் ,மன ரீதியான மாற்றங்களும் மதிக்கப்படாமல் முடக்கப்
பட்டால்,பாதிக்கப்படுவது மாணவர்கள் மட்டும் அல்ல,பெற்றோரும் பள்ளியும்தான்.
முடிவில் மாணவ
மணிகளை நம்பி இருக்கும் எதிர்கால இந்தியாவும் ஏமாற்றத்துக்கு உள்ளாகும் நிலை
உருவாகும் என்பதைக் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை
குழந்தைகளின்
நன்மைக்குத்தான் என்று எண்ணி ,பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களை தத்தம் ,தனிப்பெருமைக்காக
வழிநடத்துதலால்,மாணவப் பருவவாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய இனிமையான ஆரோக்கியமான பல நல்ல விஷயங்களைப் புறக்கணிக்க
வைத்துத் தன் படிப்பு ,அதன் பின் வேலை ,குடும்பம்
என்றும், நான் ,எனது என்ற ,சுயநலமும் கலந்த எந்திரங்களை ,உருவாக்கிவிடுகின்றனர்.
சீரான பாதையில் திசை
திருப்பிவிடப்படாத மாணவன்,தன்னைப் பொறுத்தவரை தோல்வியில் விழுந்து தனக்கு மட்டும்
பாதகமான சூழ்நிலையில் உழல்வதே வேதனையான விஷயம்தான் ,ஆனால் தான் அழிவுப்பாதையில்
செல்வதோடு நில்லாமல்,தன் பெற்றோருக்கும் ,பள்ளிநிர்வாகத்துக்கும் மனவருத்தமும்
அவதூறும் ஏற்படுமாறு நடக்க முற்படுவான்
என்றால்,அது நம் சமுதாயத்துக்கு எத்தனை பெரிய சீர்கேட்டை உண்டுபண்ணும் என்பதை
நினைத்துப் பார்த்தால்,நாம் அனைவரும் அதிர்ந்துதான் போவோம்.
அப்படி ஒரு
சீர்கேட்டின் தொடக்கத்தின் முதல் படிதான் ,கல்லூரியில் நட்த்தப்படும் இந்த ராகிங்
என்ற அரக்கத்தனமான அறிமுகப்படலம்.இதை நட்த்துவது யார்?
வாழ்க்கையில் ,உயரவேண்டும்
என்ற எண்ணத்தோடு ,கல்வி கற்கும் மாணவன் இது போன்ற அபாயத்தைச் செய்ய யோசிப்பான்
. வீட்டில்
பெற்றோரின் கவனிப்பின்மை,கண்டிப்பு,எதிர்பார்ப்பு இவைகளில் ஏதோ ஒரு காரணம், ஒரு
மாணவனைக், கல்வி கற்பது கஷ்டமான கடமை என்ற திசையில் திருப்பிவிடப்படவே ,கல்வியை
ஒதுக்கிவிட்டு இவை போன்ற ஆரோக்கியமற்ற ஆபத்தான கேளிக்கைகளில் ஈடுபட்டு தன்
கடமைகளிலிருந்து தப்பிக்க முயற்ச்சிக்கிறான்.
சிற்பம் ஓவியம்
இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு தமிழ் அறிஞர் இவ்வாறு விளக்கினார்.ஓவியமானது
,நாம் ஒரு திரையில் கோடுகளால் வரைந்து,வர்ணங்களை இட்டு நிரப்புகிறோம்,ஆனால்
சிற்பம் ஒரு கல்லில் தேவையற்ற பகுதிகளை நீக்கி சிற்பத்தை
வெளிக்கொணர்கிறோம்.தேவையற்றவைகளைக் களையும் நினைப்போடு நாம் நம் குழந்தைகளைச்
செதுக்கியிருக்கிறோமா என்று யோசித்தால் பலருடைய பதில் இல்லை என்றுதான் வரும்.
நம் எண்ணங்களை
அவனுள் திணிக்கிறோம்,நம் ஆசைகளை அவன் மனதில் பதிக்கிறோம்,நம் கனவுகளை அவன்
நிறைவேற்ற வேண்டும் என்று கட்டாயப்
படுத்துகிறோம்.நம்மால் முடியாததை மற்றொரு தனிமனிதனிடம் அவன் நம் மகனாக இருந்தாலும்
எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.
ரிஷிமூலம் நதிமூலம்
அறிய முற்பட்டால் சில கசப்பான உண்மைகள் வெளியாகும் .அந்த வகையில் பார்த்தால்
மாணவனின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தோல்விக்கும் பெற்றோரே பொறுப்பு என்ற உண்மை
புலப்படும்.
ராகிங்கில்
ஈடுபடும் மாணவனின் மனஓட்ட்த்தை அலசுவோம்.
கட்டுப்படுத்தப்பட்ட
நிலையில் இருந்து,மனப்புழுக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவன்,கல்லூரி
வாசல் தொட்டதும் ,உண்டான தனித்துவம், ’ தான்’ ,என்று உருவாகும்
எண்ணம் அவனைக் கொஞ்சம் அலைக்கழிக்க்த் தொடங்கவே,தனக்கு யாருடைய அறிவுரையும் தேவை
இல்லை என்ற ம்மதையை, மனதுக்குள் மறைத்து வைத்து,அறிவுரைகளைப் ஏற்பது போல் ஏமாற்றி
,நல் வழிகளைப் புறக்கணிக்க முற்படுகிறான்.
இவன் இட்ட
பாதையில் ,மிக இலகுவாக, சமூதாயத்தைச் சீரழிக்கும் நுண்கிருமிகள் நுழைந்து மாணவனை
ஆட்டிப்படைக்கின்றன .விளைவு , அவன்,தன்னுடைய நலம் நாடும் நல்லவர்களுக்கு வேலி போடுகிறான் ,தோள்கொடுக்கும்
நல்ல நண்பர்களுக்குத் தடை விதிக்கிறான் ,நல்ல பாதை காட்டும் அறிவுரைகளுக்குச் செவி
அடைக்கிறான் .
படிப்பவனோடும்
நல்லவர்களோடும் ஒப்பிட்டுப் பேசப்பட்டே வளர்ந்த ஒருவனுக்கு ஒரு கட்ட்த்தில் நல்வழி
நடக்க முயன்று ஏற்பட்ட தோல்வியில் பாதிக்கப்பட்டு ,நல்லவர்களை வெறுக்கத்
தொடங்குகிறான்.அத்தோடு நிற்காமல் படிப்பிலும் குணத்திலும் குறைந்தவர்களைக்
கூட்டாளியாக்கிக் கொண்டு அவர்களோடுத் தன்னைப் பிணைத்துக்கொண்டு பாம்புகளுக்கு
நடுவே ராஜநாகமாக வலம் வருகிறான்.உடன் இருப்பவரின் உசுப்பல் முகஸ்துதி என்ற நச்சு
நீர் ஊற்றி வளர்க்கப் பட்ட விஷவிருட்ச்சமாய் நின்று, இவனைப் பாராட்ட்தவர்கள் பழிவாங்கப்
படுகின்றனர்,ஏறடுத்துப்பார்க்கதவர்கள் ஏளனப்படுத்தப்படுகிறார்கள்.இப்படித்தான்
அரங்கேறுகிறது ,ராகிங் என்ற நாடகம்.
இதற்கு யார்
பொறுப்பு?
மனத்தளவில் ஆரோக்கியமற்ற மாணவர்கள் தத்தம் மன உளைச்சலை
வெளிப்படுத்த பல வடிகால்களை ஏற்படுத்தி போலியான சந்தோஷத்தில்
திளைக்கின்றனர்.தேவையில்லா கெட்ட மற்ற பழக்கங்கள் அவனை மட்டுமே பாதிக்கும் ஆனால்
ராகிங் கலாச்சாரத்தால் பல குடும்பங்களின் சந்ததிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.பாதிக்கப்பட்ட
பெற்றோரின் இந்த வேதனையை உணராமல்,தொடர்ந்து பாவங்களைச் செய்து
கொண்டிருக்கின்றனர் .
இவர்களை
நல்வழிப்படுத்துவதில் முக்கிய பொறுப்பு பெற்றோருக்குத்தான் அதில் எவ்வித
சந்தேகமும் இல்லை. நம் குழந்தைகளின்
நலனில் ,சம்பளத்துக்காகப் பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்களுக்கு இருக்குமா
,வருமானமே குறியாக் கல்விக்கூடங்களை நடத்தும் பெரும்பாலான நிர்வாகிகளிடம்
இருக்குமா?
ஒரு மாணவன்
பதக்கமும் பரிசும் வாங்கி குவிக்கும் போது பெற்றோர் அதற்கான காரணம் தாங்கள்தான்
என்று மார்தட்டிக்கொள்ளும் அதே வேளை ,மாணவனின் தீய நட்த்தைக்கும் தாங்கள்தான்
பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகிகளும் உங்கள்
பக்கம் விரலை நீட்டி அவர்கள் நழுவி விடுவர்.
பெற்றோர்கள்
த்த்தம் கடமைகளைத் தன்னலம் ஒன்றையே குறிக்கோளாக்க் கொண்டு ஆற்றாமல்,பொதுநல
நோக்கோடு ஆற்றினால் வெற்றி நிச்சயம்.
குழந்தைகள் ராகிங்
பிடியில் அகப்படாமல் தப்பி வந்த சந்தோஷத்தை அவர்கள் எப்படிக் கொண்டாட
வேண்டும்?அடுத்த ஆண்டு ,தாம் சென்ற ஆண்டில் பரிதவித்த நிலை யாருக்கும்
வராதிருக்கத் தன் குழந்தைகளை ராகிங்கில் ஈடுபடாதவண்ணம் அறிவுரை கூறி
அனுப்பிவைக்கவேண்டும் ஆனால் பெரும்பாலானோர் இதைச் செய்யத் தவறி விடுகின்றனர்.
தன் குழந்தை ராகிங்கில் மாட்டிவிடக்கூடாது என்று
பிரார்த்தனை செய்யும் பெற்றோர்களில் எத்தனை பேர் தன் குழந்தை ராகிங்கில்
ஈடுபடக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறார்கள்?
பெற்றோர்களே,குழந்தைகள் நிழல் தரும் நல்ல ஆலமரமாக வளர ,வேருக்கு
அன்பு என்னும் நீர் ஊற்றுங்கள்.சுயநலம் கலவாத பாசத்தை காட்டுங்கள்.உங்கள்
நோக்கத்தில் சுயநலம் தென்படுமானால் ,வளரும் குழந்தைகளும் அதே பாணியில்தான் கல்வி
கற்பதும் பணி புரிவதுமாக வளர்ந்து நிற்பார்கள்..நாட்டு நலம்,சமூக நலம் பேணுதல் போன்ற சேவை
மனப்பான்மையுடன் வளர வழி காட்டுங்கள் .தேசம் முன்னேற பிள்ளைகளை வலுவான தூண்களாக
நிறுத்துங்கள்.இயலாத பட்சத்தில் சமூக சீர்கேட்டுக்குத் துணைபோகாத சாதாரண நல்ல குடிமகனாகவாவது தேசத்துக்கு அளிப்போம்.






