Saturday, November 7, 2009

டீல் ஆர் நோ டீல்

சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் டீல் ஆர் நோ டீல் நிகழ்ச்சியை மகளீர் நல சங்கங்கள் எதுவும் பார்க்க வில்லையா?

அப்படித்தான் தெரிகிறது.

10 -15 பெண்கள் வரிசையாக பரிசுத் தொகை சீட்டு வைத்திருக்கும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நளினமாக வருகிறார்கள்.

ஜூனியர் சத்யராஜ் சிபி போன்றவர்கள் ,நான் பெட்டியைச் சொன்னேன்,என்று வழிவதும்,நான் பெட்டி வைத்திருப்பவர்களும் சேர்ந்து பரிசாகுமோ என்று நினைத்தேன் என்ற பாணியில் ஜொள்ளுவதும்......சகிக்கவில்லை.

அந்த பெண்கள் அழகிப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் தவறாகப் படாது.விளம்பரத்துக்காக சோப்பு சீப்போடு நின்றால் ஓகே.
ஆனால் வெறும் கவர்ச்சிக்காக ,விளம்பரத்துக்கா இப்படி வரவழைத்திருப்பது
எனக்கு உசிதமாகப் படவில்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

nellaitamil Social Bookmarking and Online Community

Sunday, November 1, 2009

தொல்லை பேசி

தொலை பேசி அழைப்பு தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது ..நமக்கு இருக்காது என்ற எண்ணத்தைச் சாதகமாக்கிக் கொண்டு மற்றவர்கள் இருக்க ..நான் சட்டியில் போட்ட கடுகை எடுத்துவிட்டு ,பொங்கும் பால் பாத்திரத்தை நகட்டி விட்டு ...பாதி நறுக்கிய தக்காளியை ,"என்னை எதற்கு வெட்டினாய் "என்று பதற விட்டு விட்டு ,கால் தடுக்கி ...கதவில் சுண்டு விரல் இடிக்க, ஓடிப் போய் எடுத்தால்...
"என்ன தூக்கமா...?என்று அழைத்தவர் கேட்டால் எப்படி இருக்கும்?

சரி போகட்டும் அழைப்பை ஏற்க நேரமான, எரிச்சல் ,அவளுக்கு ...

'விசுக் விசுக்' என்று சமைலறைக்கும் வராண்டாவுக்குமாக வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்த சமயம் தொலை பேசி ஸ்டூலைக் கடக்கும் அந்த நொடியில் சிணுங்கியது அடுத்த சிணுங்கலுக்குள் எடுத்தால்
"உனக்கு வேற வேலையே கிடயாதா எப்பவும் phone பக்கத்திலேயேதான் உக்காந்திருப்பியா?"
உயிர் தோழி உசுப்பினால் என்ன செய்வீர்கள்?
இதை பாருங்கள்.

.ஒரு தோழிக்கு பேசி பல நாட்களாகி விட்டதே ,அவள் பல முறை அழைத்தும் என்னால் பேச முடியாமல் போனது குறித்த குற்ற உணர்வுடன்,[டிராப்ஃட் எடுப்பது ,போஃன் பில் கட்டப் போவது மிக்ஸி ரிப்பேருக்குத் தருவது போன்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு] நட்போடு அவளை அழைத்தேன்
என் குரல் கேட்டதும்
"ஏன்ன நானும் உன்னை மாதிரி வேலையில்லாமல் இருக்கேனு நினைச்சியா?"
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

இனிமேல் உள் அழைப்பை மட்டும் அனுமதித்தால் போதும் வெளி அழைப்பு ,சிலிண்டர்,மினரல் தண்ணீர்,இத்தியாதி இத்தியாதி என்றிருக்க முடிவு செய்து விட்டேன்.
உங்கள் அனுபவம் எப்படி?
nellaitamil Social Bookmarking and Online Community

Tuesday, October 6, 2009

தானத்தில் சிறந்தது

வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது என்ற வாக்கியம் எப்பொழுது எங்கே பொருத்தமாகும்?
நாம் தருவது,பணமோ,உடல் உழைப்போ,உணவுப் பொருளோ இவைகளில் ஏதாவது ஒன்றானால் அடுத்தவர் கவனத்துக்குக் கொண்டு சொல்வது தேவை இல்லை.
ஆனால் அதுவே உடல் உறுப்பு தானம் என்றால் சொல்லி வைப்பது ,தெரியப்படுத்துவது மிக மிக அவசியம்.
காரணம்:
தானம் செய்வது வீணாகாமல் போவதைத் தடுக்க முடியும்.
இப்படியும் செய்யலாம் என்ற விஷயத்தை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்தலாம்
இந்த இரண்டு காரணங்களுக்காக, நான் நேற்று என் பிறந்த தினத்தன்று ,ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தோடு ,கண்தான படிவத்தில் உறுதி மொழி செய்து சங்கர நேத்ராலயா இணையதளத்துக்கு அனுப்பி வைத்தேன். இதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.


என் பிறந்த தினத்தன்று வாழ்த்து கூறிய சுவரொட்டி
தொலை பேசி மூலம் வாழ்த்திய ராமலஷ்மி,நானானி,டிவிஆர் அனைவருக்கும் நன்றி.

nellaitamil Social Bookmarking and Online Community

Saturday, September 26, 2009

அறிஞர் அண்ணா போட்ட புதிர்


அண்ணா நூற்றாண்டு விழாவில் ,பலரும் தத்தம் பாணியில் அவர் புகழ் பரப்பி அவர் நினைவு கூர்ந்தனர்.

இதோ என் பங்கு.

வெளி நாட்டில்,பல அறிஞர்கள் நிறைந்த கூட்டத்தில் அறிஞர் அண்ணா சொற்பொழிவு ஆற்றும் வேளை ,அனைவரிடமும் ஒரு கேள்வி கேட்டார்.

BECAUSE என்ற வார்த்தை ,மூன்று முறை தொடர்ந்து வரும்படி, ஒரு வாக்கியம் உண்டு அது என்ன?

பல நிமிடங்கள் காத்திருந்தபின் பதிலையும் அவரே சொன்னதாக வாசித்திருக்கிறேன்

அந்த பதில் என்ன என்பதை நான் இன்று உங்களிடம் கேட்கிறேன்.

பதில் .ஒரு சில நாட்களில்.

[படம் அறிஞர் அண்ணா இணையதளம்]
nellaitamil Social Bookmarking and Online Community

Sunday, September 13, 2009

டாப் ட்வெல்வ்

1-இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
----------------------------------
2-சின்னச் சின்ன நடை நடந்து செம்பவழ வாய் திறந்து....
------------------------
3-உலகே மாயம் வாழ்வே மாயம் [தேவதாஸ்]
---------------
4-சரச மோஹன சங்கீதா...
-----------------
5-அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை...
-------------------------
6-வாழ்ந்தாலும் ஏசும் ..
-------------------------------
7-நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்...
-------------------------------------
8-துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே...
--------------------
9-சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா...
----------------------------
10-கொஞ்சும் மொழி மைந்தர்களே ...
-----------------------
11-மல்லிகைப் பூ ஜாதி ரோஜா...முல்லைப் பூ வேணுமா...
----------------------
12-செந்தமிழ் தேன் மொழியாள்....
-----------------------

என் சிறுமி பருவத்து ஃப்ளாஷ் பேக் சமயங்களில் மனத் திரையில் ஓடும் .

அந்த நாளில் ஐ பாட் இருந்திருந்தால் நான் நான் எந்தெந்த பாடல்களைச் சேமித்து வைத்திருப்பேன் என்று ஓட விட்டேன்.

மேற்கூரிய 12 பாடல்கள்தான் ,தற்பொழுது சட்டென்று நினைவுக்கு வந்தன.

கிடைத்தால் கேட்டுப் பாருங்கள்.அத்தனையும் தேன் துளிகள்.


nellaitamil Social Bookmarking and Online Community