Thursday, December 10, 2009

சிஸ்டர் அலெக்சின் பிறந்தநாள் வைபவம்

பிகாசாவில் காண இங்கே தட்டவும்.

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் உள்ளூரில் இருந்தும் வர இயலாதவர்களுக்கும் இந்த ஆல்பம் பதிவாகியிருக்கிறது.

-------------------------------


ஒரு வயது ,

குழந்தை போல்

நடப்பது என்னவென்று புரியாமல்,

அனைவரும் நம்மைக் காண வந்திருக்கின்றனர் ,என்ற

மகிழ்ச்சியுடன் கேக் வெட்டினார்.

எதிரே வந்து நின்று நெகிழ்ந்தவருக்கு ,

அன்புடன் ஆசி கூறினார்.

வந்தவர் யாரென்று பெயர் மறந்தாலும் ,

புன்னகை மறக்காமல் பூரித்துப் போனார்.

பள்ளிச் சிறுமியாய் பார்த்த அனைவரும்

அன்னையின் பாசத்தோடு ,

தன்னை அன்னையாக்கி அணைத்து ஆசி பெற்றதில்

ஆனந்தம் அடைந்தார்.

சென்ற ஆண்டை விட முதுமை இந்த முறை

அவரை அதிகமாகவே அரவணைத்துக் கொண்டிருப்பது,

எங்களுக்கு ,எந்த ஆண்டும் கவனத்தில் இது போல் பட்டதில்லை.

நோய் நொடி அண்டாமல் அவர் நலமாய் வாழ

இறைவனைப் பிரார்த்தித்து ,

2010லும் இதுபோல் அனைவரும் ஒன்று சேர

அந்த ஆண்டவனை வேண்டிக்

கேட்டுக் கொள்வோம் என்று கூறி

விடை பெற்றோம்

nellaitamil Social Bookmarking and Online Community

Saturday, December 5, 2009

கலாம். இன்றைக்கும் வாசிக்கலாம்

பார்க் 'கலாம் '






ஆண்டுகள் பல கடந்து கண்டெடுத்தோம்
ஒருஒரு காமராஜ்.
அவர் அனுபவத்தில்
பட்டம் வாங்கிய அறிவாளி
இவர் பல்கலைக் கழகத்தில்
பட்டம் வாங்கிய அனுபவசாலி.
அவர்,பார்க்கலாம் பார்க்கலாம் என்றுகூறியே,
வளங்கள் பல கண்டவர்.
இவரும்தான்,
சொல்கிறார்,'பார்க்கலாம் ' ' பார்க்கலாம் ' என்று.
இவர் வந்த பின்,
இந்திய மாணவர் சமுதாயம்,
தலை நிமிர்ந்து நிற்பதைப் பார்க்-கலாம்,
விஞ்ஞானம்,மறுமலர்ச்சி,அடைவதைப் பார்க்-கலாம்
நாட்டின் பொருளாதாரம் உயர்வதைப் பார்க்-கலாம்,
இது போல்,நன்மைகள்,
எத்தனையோ பார்க்-கலாம்.
,மதிப்பிற்குரிய, ஜனாதிபதி,
டாக்டர் அப்துல்கலாம்,ஆட்சியில்.
--------------------------------------
[பள்ளிக்கூடச் சுட்டிகளுக்காக 3/ஜூலை/03 ல் எழுதியது]
------------------------------------------
[கடமை வீரர் காமராசர் படம் சென்னை ஏர்போர்ட்டில் நான் தட்டியது.] nellaitamil Social Bookmarking and Online Community

Saturday, November 7, 2009

டீல் ஆர் நோ டீல்

சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் டீல் ஆர் நோ டீல் நிகழ்ச்சியை மகளீர் நல சங்கங்கள் எதுவும் பார்க்க வில்லையா?

அப்படித்தான் தெரிகிறது.

10 -15 பெண்கள் வரிசையாக பரிசுத் தொகை சீட்டு வைத்திருக்கும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நளினமாக வருகிறார்கள்.

ஜூனியர் சத்யராஜ் சிபி போன்றவர்கள் ,நான் பெட்டியைச் சொன்னேன்,என்று வழிவதும்,நான் பெட்டி வைத்திருப்பவர்களும் சேர்ந்து பரிசாகுமோ என்று நினைத்தேன் என்ற பாணியில் ஜொள்ளுவதும்......சகிக்கவில்லை.

அந்த பெண்கள் அழகிப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் தவறாகப் படாது.விளம்பரத்துக்காக சோப்பு சீப்போடு நின்றால் ஓகே.
ஆனால் வெறும் கவர்ச்சிக்காக ,விளம்பரத்துக்கா இப்படி வரவழைத்திருப்பது
எனக்கு உசிதமாகப் படவில்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

nellaitamil Social Bookmarking and Online Community

Sunday, November 1, 2009

தொல்லை பேசி

தொலை பேசி அழைப்பு தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது ..நமக்கு இருக்காது என்ற எண்ணத்தைச் சாதகமாக்கிக் கொண்டு மற்றவர்கள் இருக்க ..நான் சட்டியில் போட்ட கடுகை எடுத்துவிட்டு ,பொங்கும் பால் பாத்திரத்தை நகட்டி விட்டு ...பாதி நறுக்கிய தக்காளியை ,"என்னை எதற்கு வெட்டினாய் "என்று பதற விட்டு விட்டு ,கால் தடுக்கி ...கதவில் சுண்டு விரல் இடிக்க, ஓடிப் போய் எடுத்தால்...
"என்ன தூக்கமா...?என்று அழைத்தவர் கேட்டால் எப்படி இருக்கும்?

சரி போகட்டும் அழைப்பை ஏற்க நேரமான, எரிச்சல் ,அவளுக்கு ...

'விசுக் விசுக்' என்று சமைலறைக்கும் வராண்டாவுக்குமாக வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்த சமயம் தொலை பேசி ஸ்டூலைக் கடக்கும் அந்த நொடியில் சிணுங்கியது அடுத்த சிணுங்கலுக்குள் எடுத்தால்
"உனக்கு வேற வேலையே கிடயாதா எப்பவும் phone பக்கத்திலேயேதான் உக்காந்திருப்பியா?"
உயிர் தோழி உசுப்பினால் என்ன செய்வீர்கள்?
இதை பாருங்கள்.

.ஒரு தோழிக்கு பேசி பல நாட்களாகி விட்டதே ,அவள் பல முறை அழைத்தும் என்னால் பேச முடியாமல் போனது குறித்த குற்ற உணர்வுடன்,[டிராப்ஃட் எடுப்பது ,போஃன் பில் கட்டப் போவது மிக்ஸி ரிப்பேருக்குத் தருவது போன்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு] நட்போடு அவளை அழைத்தேன்
என் குரல் கேட்டதும்
"ஏன்ன நானும் உன்னை மாதிரி வேலையில்லாமல் இருக்கேனு நினைச்சியா?"
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

இனிமேல் உள் அழைப்பை மட்டும் அனுமதித்தால் போதும் வெளி அழைப்பு ,சிலிண்டர்,மினரல் தண்ணீர்,இத்தியாதி இத்தியாதி என்றிருக்க முடிவு செய்து விட்டேன்.
உங்கள் அனுபவம் எப்படி?
nellaitamil Social Bookmarking and Online Community

Tuesday, October 6, 2009

தானத்தில் சிறந்தது

வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது என்ற வாக்கியம் எப்பொழுது எங்கே பொருத்தமாகும்?
நாம் தருவது,பணமோ,உடல் உழைப்போ,உணவுப் பொருளோ இவைகளில் ஏதாவது ஒன்றானால் அடுத்தவர் கவனத்துக்குக் கொண்டு சொல்வது தேவை இல்லை.
ஆனால் அதுவே உடல் உறுப்பு தானம் என்றால் சொல்லி வைப்பது ,தெரியப்படுத்துவது மிக மிக அவசியம்.
காரணம்:
தானம் செய்வது வீணாகாமல் போவதைத் தடுக்க முடியும்.
இப்படியும் செய்யலாம் என்ற விஷயத்தை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்தலாம்
இந்த இரண்டு காரணங்களுக்காக, நான் நேற்று என் பிறந்த தினத்தன்று ,ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தோடு ,கண்தான படிவத்தில் உறுதி மொழி செய்து சங்கர நேத்ராலயா இணையதளத்துக்கு அனுப்பி வைத்தேன். இதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.


என் பிறந்த தினத்தன்று வாழ்த்து கூறிய சுவரொட்டி
தொலை பேசி மூலம் வாழ்த்திய ராமலஷ்மி,நானானி,டிவிஆர் அனைவருக்கும் நன்றி.

nellaitamil Social Bookmarking and Online Community